உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ ,
உடல் முழுதும் பரவிச்செல்ல...
கடல் மீது மிதக்கும் கப்பலானது,
தேகங்கள் இரண்டும்...!
மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக...
அமைதியான கடலும்,
ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்...
அடங்காக் குணங்கொண்டது...!
நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்...
வள்ளமும் கள்ளமாய் செல்லமாய்,
கொஞ்ச ... மோக வேகமெடுத்தது...!
யாருமில்லாத தீவொன்றில்...
கரையொதுங்கியது காமரசம் சுமந்த கப்பல்...!
பாய்ச்சிய நங்கூரம் தரைதொட்ட போதும்...
அலைகளோடு ஆடிக்கொண்டே இருந்தது,
தரைதட்டும் வரை...!
இரவோடு நிலவொளி புணர்ந்து,
வெள்ளி மலை முகடுகள் அலையலையாய்...
கார்கடற் பள்ளங்கள் மீதெழும்ப,
வேகமாய் கரைதேடி ஓடின நீரலைகள்..!
கரைகளில் களைத்துப்போன...
மூச்சுக்காற்றின் நீர்க்குமிழிகள்,
வெள்ளை நுரைகளாய் அடித்தோய்ந்து...
மீண்டும் கரைவரும் அலைகளில்...
கலக்கத் தயாராய் வெடித்து,
நீர்நிலையாகி நிலையெடுத்து நின்றன!
பாய்மரம் இறக்கிய கப்பல்,
மணற்கரைகளில் தவழ்கின்றது...
அடுத்த பயணத்துக்காக,
கடல் மீது இறங்க...!
மிதக்கும் நீரில் மூழ்கும்வரை,
கப்பல்களின் பயணங்கள் தொடரும்...!
உடல் முழுதும் பரவிச்செல்ல...
கடல் மீது மிதக்கும் கப்பலானது,
தேகங்கள் இரண்டும்...!
மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக...
அமைதியான கடலும்,
ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்...
அடங்காக் குணங்கொண்டது...!
நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்...
வள்ளமும் கள்ளமாய் செல்லமாய்,
கொஞ்ச ... மோக வேகமெடுத்தது...!
யாருமில்லாத தீவொன்றில்...
கரையொதுங்கியது காமரசம் சுமந்த கப்பல்...!
பாய்ச்சிய நங்கூரம் தரைதொட்ட போதும்...
அலைகளோடு ஆடிக்கொண்டே இருந்தது,
தரைதட்டும் வரை...!
இரவோடு நிலவொளி புணர்ந்து,
வெள்ளி மலை முகடுகள் அலையலையாய்...
கார்கடற் பள்ளங்கள் மீதெழும்ப,
வேகமாய் கரைதேடி ஓடின நீரலைகள்..!
கரைகளில் களைத்துப்போன...
மூச்சுக்காற்றின் நீர்க்குமிழிகள்,
வெள்ளை நுரைகளாய் அடித்தோய்ந்து...
மீண்டும் கரைவரும் அலைகளில்...
கலக்கத் தயாராய் வெடித்து,
நீர்நிலையாகி நிலையெடுத்து நின்றன!
பாய்மரம் இறக்கிய கப்பல்,
மணற்கரைகளில் தவழ்கின்றது...
அடுத்த பயணத்துக்காக,
கடல் மீது இறங்க...!
மிதக்கும் நீரில் மூழ்கும்வரை,
கப்பல்களின் பயணங்கள் தொடரும்...!